07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு

புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு
20 லட்சம் சதுர பரப்பளவில் 21 ஏக்கர் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது

ததமிழக சட்டப்பேரவை நிகழ்வின் போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் தமிழகத்திற்கான புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டிருக்கக்கூடிய வகையில ஒரு புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்கின்ற ஒரு அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டிருக்கக்கூடிய நிலையில சென்னையில எந்த பகுதியில் தலைமை செயலகம் அமைய இருக்கிறது என்கிற பல்வேறு கேள்விகள் இருந்தது.

அதற்கு பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த ஆய்வுகள் நடந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக கடற்கரை சாலையில் இருக்கக்கூடிய பட்டினப்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய ஹவுசிங் போர்டு பகுதியை விட்டுருக்கக்கூடிய இடங்கள்ல தமிழகம் அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல கிண்டியிலும் சொல்லப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் ஒரு அரசாணை என்பது வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அரசாணையின்படி, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் இருக்கக்கூடிய இந்த ஹவுசிங் போர்டு இடங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய 21 ஏக்கர் தற்போது புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இவற்றை கண்காணிப்பதற்காகவும் தலைமை அமைவதற்கான அந்த பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் மாவட்ட நிர்வாகம் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் பகுதியில் இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சில இடங்கள் இருக்கிறது. அவற்றினுடைய பட்டாயங்கள் சபையின் மூலமாக அவற்றிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட தற்போது இருக்கக்கூடிய தலைமை செயலகத்தினுடைய இட பற்றாக்குறை மற்றும் பணியாளர்களுடைய இட நெருக்கடி காரணமாக புதிய தலைமை செயலகம் அமைப்பது என்பது முக்கியமான தேவையாக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

20 லட்சம் சதுர பரப்பளவில் அந்த கட்டிடம் என்பது அமைய இருப்பதாகவும் அவர் சொல்லி இருந்தார். கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாய் மதிப்பில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுருக்கிறது.

அதை நம்மால் பார்க்க முடிகிறது கிட்டத்தட்ட நவீன வசதியுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில அதற்கான இடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

பட்டினவங்கம் பகுதியை பொறுத்த வரைக்கும் 21.37 7 ஏக்கர் ஹவுசிங் போர்ட் லேண்ட் இருக்கிறது அந்த பகுதியில தலைமை அமைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்திடம் அதற்கான அனுமதி என்பதும் பெறப்பட்டிருப்பதாகவும் தற்போது சொல்லப்பட்டிருக்கிறது.