07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் நெல் ₹2,750, கரும்பு ₹4,000, பால் ₹41/லிட்டர் உயர்த்தி அறிவிப்பு முதலமைச்சர் விஜய் 100 நாட்களில் மருத்துவக் காப்பீட்டை ₹5 லட்சத்திலிருந்து ₹25 லட்சமாக உயர்த்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இன்று ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றுகிறார்! முதல்முறை சுதந்திர தின விழா – முழு விவரம் Tamil Nadu Assembly Passes Anti-NEET Resolution Moved by Minister Arun Raj முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை – முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தீர்மானம் Tvk சட்டமன்ற உறுப்பினர் என். செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது – அரசியல் களத்தில் பரபரப்பு!

சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு பின்னணி: தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து உதயநிதி பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் "திரிஷா, திரிஷா" என முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி பேசிய பேச்சு, பெண்களுக்கு எதிரான அருவருக்கத்தக்க மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட கருத்து எனக் கூறி தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

​இதனைத் தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Section 67 IT Act) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற விசாரணை: உதயநிதியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணைக்குப் பிறகு அவரை விடுவிக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டது. அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுகையில், "காவல்துறை விசாரணை மட்டுமே நடத்த விரும்புகிறது, காவல் Custody எடுக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு:

  • டிவிகே (TVK): உதயநிதியின் பேச்சு பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும், பொதுவெளியில் பெண்களை ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாக்குகிறது என்றும் கூறி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
  • பாஜக (BJP): உதயநிதியின் பேச்சை "அருவருக்கத்தக்கது, ஆபாசமானது மற்றும் வெட்கக்கேடானது" என வன்மையாகக் கண்டித்துள்ளது.

​தற்போது காவிரி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், உதயநிதியின் கைதால் டிவிிகே மற்றும் திமுக இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது