07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் நெல் ₹2,750, கரும்பு ₹4,000, பால் ₹41/லிட்டர் உயர்த்தி அறிவிப்பு முதலமைச்சர் விஜய் 100 நாட்களில் மருத்துவக் காப்பீட்டை ₹5 லட்சத்திலிருந்து ₹25 லட்சமாக உயர்த்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இன்று ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக் கொடி ஏற்றுகிறார்! முதல்முறை சுதந்திர தின விழா – முழு விவரம் Tamil Nadu Assembly Passes Anti-NEET Resolution Moved by Minister Arun Raj முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை – முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தீர்மானம் Tvk சட்டமன்ற உறுப்பினர் என். செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை

முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 7, 2026 அன்று காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கியமான பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர்,

“காவிரி நம்முடைய உயிர் ஆதாரம். அது உணர்வு ரீதியான பிரச்சினை. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.”

என்று தெரிவித்தார்.

1969-ல் சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களைச் சுட்டிக்காட்டி, அப்போது யார் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார், ஏன் அணைகள் கட்ட அனுமதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்ப விரும்பவில்லை என்று கூறினார்.

“அப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை.”

என அவர் வலியுறுத்தினார்.மேலும், கர்நாடக முதலமைச்சருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் முன்வந்ததாகவும், அதனால் அவமானம் ஏற்பட்டாலும் தமிழக மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

“எதிரி நாடுகள்கூட பேசி பிரச்சினைகளைத் தீர்க்கின்றன. அண்டை மாநிலத்துடன் பேசுவதில் தவறில்லை”

என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தின் காவிரி உரிமை மற்றும் மேகதாது அணைக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவுக்கும் சமரசம் இல்லை என்றும், சட்டப்போராட்டம் தொடரும் என்றும் உறுதியளித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்றும், ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை சட்டசபையில் பெரும் கவனத்தை ஈர்த்தது