சென்னை, ஆகஸ்ட் 15, 2026
இன்று காலை 8.45 மணிக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டை தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் சுதந்திர தினக் கொடி ஏற்றம் ஆகும். TVK அரசின் முதல் சுதந்திர தின விழாவும் இதுவே.முதலமைச்சர் விஜய் கொடி ஏற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்றுவார். மேலும் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, போலீஸ் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளை வழங்குவார்.ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் திருவனந்தபுரத்தில் இருப்பதால், லோக் பவன் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.