Tamil Nadu

தவெக நிர்வாகிகளை பற்றி தவறான செய்தி பரப்பப்படுகிறது

Tvk
தவெக நிர்வாகிகளை பற்றி தவறான செய்தி பரப்பப்படுகிறது

இது முற்றிலும் ஒரு தவறான செய்தி:

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகி: தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்! தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள ராயமுண்டான்பட்டியில் கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தள்ளுமுள்ளுவால் பரபரப்பு: பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி தமிழ்வாணன் என்பவர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் அங்கிருந்தவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் தற்காலிகமாக பரபரப்பான சூழல் நிலவியது.