Tamil Nadu

எனக்கு அமைச்சர்கள் முக்கியமா மக்கள் முக்கியமா என கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்லுவேன் - முதலமைச்சர் ஜோசப் விஜய்

Tvk
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா மக்கள் முக்கியமா என கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்லுவேன் - முதலமைச்சர் ஜோசப் விஜய்

வணக்கம்.

அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி பார்த்தோம் என்றால் எனக்கு அமைச்சர்கள் முக்கியமா மக்கள் முக்கியமா என கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்லுவேன் எனவும் இந்த ஐந்து ஆண்டுகளுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பணி செய்யவே நான் வந்திருப்பேன் வந்திருக்கிறேன் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நான் எப்படி உள்ளேனோ அதைதான் நீங்களும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்ட அவர் மக்களுக்கு நல்லது செய்வோம் என மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை.

சொல்லளவில் எதுவும் இருக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளவர். தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு கிளீன் கவர்மெண்ட்டாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் தான் அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர்களுக்கு பல்வேறு எச்சரிக்கையும் விடுத்திருக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் முக்கியமா மக்கள் முக்கியமா என கேட்டால் மக்கள் தான் எனக்கு முக்கியம் எனவும் மக்களை என்னை நம்பி தேர்வு செய்திருக்கிறார்கள் அவர்களுக்காக பணி செய்யவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.